search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங்கில் உள்ள நிரவ் மோடியின் ரூ.255 கோடி சொத்துகள் முடக்கம்
    X

    ஹாங்காங்கில் உள்ள நிரவ் மோடியின் ரூ.255 கோடி சொத்துகள் முடக்கம்

    ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. #PNBFraud #NiravModi #ED
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வருகின்றனர். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.



    இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

    இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹாங்காங் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. #PNBFraud #NiravModi
    Next Story
    ×