search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்குவங்கத்தில் சோகம் - சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி
    X

    மேற்குவங்கத்தில் சோகம் - சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

    மேற்குவங்காளம் மாநிலத்தின் சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Santragachhi #Stampede
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் சந்திரகாசி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இன்று இரவு இந்த ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

    ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேம்பாலத்தில் திபுதிபுவென ஏறினர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சந்திரகாசி ரெயில் நிலையத்தின் நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மேலும், நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #Santragachhi #Stampede
    Next Story
    ×