search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காக்கிநாடா அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
    X

    காக்கிநாடா அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

    ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே வேன் மீது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். #RoadAccident
    காக்கிநாடா:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் காடிசெர்லா வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று காக்கிநாடாவில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் வேன் மூலம் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர்.

    மாலை சுமார் 3 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டலங்கா செருவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. வேனுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேனில் இருந்த 5 பெண்கள் மற்றும் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.  8 பேர் பலத்த காயங்களுடன் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #RoadAccident
    Next Story
    ×