search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி
    X

    உ.பி.யில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #UP #Accident
    லக்னோ:

    நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலா வந்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #UP #Accident
    Next Story
    ×