search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு
    X

    இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

    இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்பித்து, வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. #Crorepatis #IncomeTaxDepartment
    புதுடெல்லி:

    மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி செலுத்தியவர்கள் (தனியார் நிறுவனங்கள் உள்பட) எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர்வு விகிதாச்சாரம் நிதியாண்டு 2014-15-ம் 88 ஆயிரத்து 649 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்ப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18-ல் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    இதே காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி கட்டியவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 416-ல் இருந்து 81 ஆயிரத்து 344 ஆக (68 சதவீதம்) உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்டரீதியான, தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த உயர்வுக்கு காரணம் என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக (80 சதவீதம்) உயர்ந்துள்ளது.  #Crorepatis #IncomeTaxDepartment
    Next Story
    ×