என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
19 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டார் - சந்திரபாபு நாயுடு மீது ரோஜா பாய்ச்சல்
நகரி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக கூறுகிறார்.
அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்து உள்ளதா என்று கேள்வி கேட்டு, நலத்திட்டங்கள் கிடைத்தது என்றால் எண் ஒன்றை அழுத்த கூறுகின்றனர். இதேபோல் அரசின் செயல்பாடு திருப்தி இல்லை என்றால் எண் இரண்டை அழுத்த கூறுகின்றனர்.
மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று செல்போனில் கருத்து கேட்டு வருவதாக கூறுவது ஏமாற்று வேலை. அரசு செயல்பாடு திருப்தி இல்லை என்று பதிவு செய்த 19 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து சந்திரபாபு நாயுடு நீக்கி உள்ளார்.
தன் அரசுக்கு எதிரானவர்களை கண்டறிந்து நீக்குவதற்காகத்தான் செல் போனில் கருத்து கேட்டு சதி செயலில் ஈடுபடுகிறார்கள். நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
எனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய நிதி அளிப்பதில்லை. அரசு பெண்கள் பள்ளியில் போதுமான கழிவறை இல்லை. எதிர்க்கட்சி என்பதால் எனது தொகுதியை புறக்கணித்து வருகிறார்கள். இருந்தாலும் எனது சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்