search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
    X

    கேரளாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

    கேரளாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #RiverDeath

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே உள்ளது துக்னாபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் மொய்து. இவர்களுக்கு ஷாகீர் (வயது20), ஷாகிம் (11) என்ற மகன்களும், ஜூமானா (14) என்ற மகளும் இருந்தனர்.

    சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் பாரதபுழை ஆற்றில் கும்பிடி குளிக்க என்ற இடத்தில் குளித்தபோது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் குற்றிப்புரம் போலீசார் அவர்களது உடலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் குளித்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் 3 பேரும் தனித்தனியே இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RiverDeath

    Next Story
    ×