search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலின் தொன்மை கலாசாரத்தை காக்க வேண்டும்: குமாரசாமி
    X

    சபரிமலை கோவிலின் தொன்மை கலாசாரத்தை காக்க வேண்டும்: குமாரசாமி

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் தொன்மையான கலாசாரத்தை(பெண்களுக்கு தடை) காக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் தொன்மையான கலாசாரத்தை(பெண்களுக்கு தடை) காக்க வேண்டும். இந்த கலாசாரத்தை மீறுவதால், பிரச்சினைகள் எழுகின்றன. இது எனது தனிப்பட்ட கருத்து. இது முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.
    Next Story
    ×