search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
    X

    வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    ஷீரடியில் இன்று பேசிய பிரதமர் மோடி, வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ShirdiSaiBaba
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபாவின் 100-வது மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷீரடி வந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயனடைந்த மக்களுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.

    இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.



    மேலும், தற்போதைய அரசு, ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், தெரிவித்த அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டதாகவும், ஆனால், அதே 4 ஆண்டு காலத்தில் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை தற்போதைய அரசு சாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, ஏழைகளின் வறுமையை ஒழிக்க முயற்சிக்கவில்லை என்றும், மாறாக ஒரு குடும்பத்தை உயர்த்துவதிலும், வாக்கு வங்கியிலுமே கவனம் செலுத்தியதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ShirdiSaiBaba
    Next Story
    ×