என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 Oct 2018 11:32 AM GMT (Updated: 19 Oct 2018 11:32 AM GMT)
ஷீரடியில் இன்று பேசிய பிரதமர் மோடி, வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ShirdiSaiBaba
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபாவின் 100-வது மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷீரடி வந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயனடைந்த மக்களுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசு, ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், தெரிவித்த அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டதாகவும், ஆனால், அதே 4 ஆண்டு காலத்தில் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை தற்போதைய அரசு சாதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, ஏழைகளின் வறுமையை ஒழிக்க முயற்சிக்கவில்லை என்றும், மாறாக ஒரு குடும்பத்தை உயர்த்துவதிலும், வாக்கு வங்கியிலுமே கவனம் செலுத்தியதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ShirdiSaiBaba
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபாவின் 100-வது மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷீரடி வந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயனடைந்த மக்களுக்கு வீட்டின் சாவியை வழங்கினார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, ஏழைகளின் வறுமையை ஒழிக்க முயற்சிக்கவில்லை என்றும், மாறாக ஒரு குடும்பத்தை உயர்த்துவதிலும், வாக்கு வங்கியிலுமே கவனம் செலுத்தியதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #ShirdiSaiBaba
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X