search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மைக்கு கிடைத்த வெற்றி - எம்.ஜே.அக்பர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கருத்து
    X

    உண்மைக்கு கிடைத்த வெற்றி - எம்.ஜே.அக்பர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கருத்து

    பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தது உண்மைக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #Metoo #MJAkbar #Congress
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அந்த வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜ.க.வில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
     
    அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, நேற்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரின் ராஜினாமா, உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கருத்து தெரிவித்துள்ளார். #Metoo #MJAkbar #Congress
    Next Story
    ×