என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்17 Oct 2018 12:19 PM GMT (Updated: 17 Oct 2018 12:19 PM GMT)
கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு இன்று மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #GodmanRampal #Rampallifesentence
சண்டிகர்:
அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானா மாநில அரசில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.
திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராக மாறினார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.
ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் இவர் பேசியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகினர்.
இந்நிலையில், மேலும் ஒரு கொலை வழக்கில் ராம்பால் உள்பட 13 பேருக்கு ஹிசார் கோர்ட் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இவரது ஆசிரமத்துக்குள் ஒரு பெண் பக்தர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் ராம்பால் மற்றும் 13 பேருக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் ராம்பால் உள்பட 14 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஹிசார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஆர்.சாலியா இன்று உத்தரவிட்டுள்ளார். #GodmanRampal #Rampallifesentence
அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங் ஜடின். ஐ.டி.ஐ. டிப்ளமோ பட்டதாரியான இவர் அரியானா மாநில அரசில் நீர்ப்பாசனத்துறை இளநிலை என்ஜினீயராக பணியாற்றினார்.
திருமணமாகி மனைவி 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராக மாறினார். அரியானாவில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரியானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மீக சேவையாற்றினார்.
ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் இவர் பேசியதால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகினர்.
ஹிசார் மாவட்ட கோர்ட்டில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஹிசார் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.
இந்நிலையில், மேலும் ஒரு கொலை வழக்கில் ராம்பால் உள்பட 13 பேருக்கு ஹிசார் கோர்ட் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இவரது ஆசிரமத்துக்குள் ஒரு பெண் பக்தர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் ராம்பால் மற்றும் 13 பேருக்கு எதிராக தொடரப்பட்ட கொலை வழக்கில் ராம்பால் உள்பட 14 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ஹிசார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஆர்.சாலியா இன்று உத்தரவிட்டுள்ளார். #GodmanRampal #Rampallifesentence
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X