search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது
    X

    பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது

    பெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட சிவகாசி வாலிபரை போலீசார் கைது செய்தனர். #YouthArrested
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே உள்ள பங்காருபேட்டை வட்டம் கெரேகொடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர் தங்கவயல் உரிகம் பேட்டையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் தனது புகைப்படங்களை யாரோ கிராபிக்ஸ் மூலம் மாற்றி அமைத்து ஆபாசமாக பதிவு செய்து, இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறி இருந்தார்.

    இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அஞ்சப்பா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகைப்படத்தை வெளியிட்டவரின் செல்போன் எண்ணை கண்டறிந்து பார்த்ததில், தமிழகத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த வாலிபர் கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிவகாசிக்கு சென்ற போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். அவரை தங்கவயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #YouthArrested

    Next Story
    ×