search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இது என்ன டூ? - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    இது என்ன டூ? - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை

    மிடூ, விடூ போட்டி இயக்கங்கள் உருவாகியுள்ள நிலையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தொடர்ந்து உறவுக்கு வற்புறுத்தியத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtraman #womanpesters #illicitaffair
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மிட்காரி(38).பர்பானி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த சச்சினுக்கும் உடன் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் நட்பாக அரும்பிய இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாகவும், கள்ளத் தொடர்பாகவும் உருவெடுத்தது. ஏற்கனவே திருமணமான சச்சினுடன் உடலுறவு கொள்வதில் அதிக ஆர்வம் காண்பித்த அந்தப்பெண் தொடர்ந்து அடிக்கடி அவரை உறவுக்கு அழைத்து நச்சரித்து வந்துள்ளார்.

    தனது தணியாத ஆசைக்கு இணங்காவிட்டால் போலீசில் பாலியல் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதனால், மன உளைச்சலுக்குள்ளான சச்சின் நேற்று பர்பானி-வஸ்மத் சாலையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #Maharashtraman #womanpesters #illicitaffair #SachinMitkari #Parbhani 
    Next Story
    ×