search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார்கள் குறித்து பரிசீலிக்கப்படும் - அமித் ஷா
    X

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார்கள் குறித்து பரிசீலிக்கப்படும் - அமித் ஷா

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து பரிசீலிக்கப்படும் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். #MeToo #MJAkbar #AmitShah
    புதுடெல்லி :

    பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே மத்திய மந்திரிகளாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் எம்.ஜே.அக்பருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறினார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மற்றொரு மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.

    இந்நிலையில்  எம்.ஜே.அக்பர் விவகாரம் தொடரபாக பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியதாவது :-

    எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும். சமூக வலைத் தளங்களில் அவருக்கு எதிராக வந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது தவறா என்பதைக் காண வேண்டும் என அவர் கூறினார். #MeToo #MJAkbar #AmitShah
    Next Story
    ×