search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா மருமகன் மீது  புதிய ஊழல் குற்றச்சாட்டு
    X

    சோனியா மருமகன் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். #Congress #RobertVadra
    புதுடெல்லி:

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பெங்களூர் கங்கேனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின் டி.எல்.எப். நிறுவனம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் மீது நாங்கள் லோக்அயுக்தா அமைப்பில் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RobertVadra
    Next Story
    ×