என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும் - சதானந்தகவுடா
Byமாலை மலர்12 Oct 2018 3:21 AM GMT (Updated: 12 Oct 2018 3:21 AM GMT)
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda
பெங்களூரு:
மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆயினும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்த நிலையில் மந்திரி என்.மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் கூறி வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பா.ஜனதா. அதன் அடிப்படையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும். ஆபரேஷன் தாமரை மூலம் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுப்பதாக கூறுவது தவறு. பா.ஜனதா அத்தகைய முயற்சிைய மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda
மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆயினும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்த நிலையில் மந்திரி என்.மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் கூறி வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பா.ஜனதா. அதன் அடிப்படையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும். ஆபரேஷன் தாமரை மூலம் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுப்பதாக கூறுவது தவறு. பா.ஜனதா அத்தகைய முயற்சிைய மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X