search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர் இரும்பு ஆலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
    X

    சத்தீஸ்கர் இரும்பு ஆலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டியராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    மேலும், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பெனியின் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    Next Story
    ×