search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் திடீர் மரணம்
    X

    பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் திடீர் மரணம்

    பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் ரமீலா உமா சங்கர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்தார். #RamilaUmashankar #DeputyMayor
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் ரமீலா உமா சங்கர் (வயது 44). ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த இவர் துணை மேயராக பதவி ஏற்று ஒரு வாரம் தான் ஆகிறது.

    இன்று அதிகாலை 2.30 மணிக்கு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் இவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அறிவித்தனர். மாரடைப்பால் மரணம் அடைந்த ரமீலா உமாசங்கர் பெங்களூரு மாநகராட்சி காவேரிபுறா வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    அவரது மறைவிற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #RamilaUmashankar  #DeputyMayor
    Next Story
    ×