search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இச்சைக்கு கைகொடுத்த மூடநம்பிக்கை - திருமண தோஷம் இருப்பதாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்
    X

    இச்சைக்கு கைகொடுத்த மூடநம்பிக்கை - திருமண தோஷம் இருப்பதாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்

    புதுடெல்லியில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி, 23 வயது இளம் பெண் ஒருவரை அவரது உறவினரே 4 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது.

    இதையடுத்து சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அதற்கு பிறகும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய அந்த உறவினர் வற்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இளம்பெண் தனது கணவர் வீட்டாரிடம் நடந்ததை கூறி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Delhi
    Next Story
    ×