search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்: சித்தராமையா
    X

    நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்: சித்தராமையா

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah,#Congress
    பெங்களூரு :

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சித்தராமையா நேற்று சுற்றுப்பயணம் செய்தார். பாதாமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    ‘மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசுபவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம். அவர்களது வெறும் பேச்சு தான். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பேச்சில் மயங்கிவிட வேண்டாம். நாங்கள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.

    நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி 4 மாதங்கள் ஆகின்றன. நான் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறேன். அதனால் என்னால் இங்கு அடிக்கடி வர முடியவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்.

    நான் இந்த தொகுதிக்கு வரும்போது, என்னை வந்து நேரில் சந்தித்து மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah,#Congress 
    Next Story
    ×