search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் பெண்களின் உடலை சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள்
    X

    ராஜஸ்தானில் பெண்களின் உடலை சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள்

    ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடலை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் அன்று மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, நேற்று அவர்களது உடலுக்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதாக திட்டமிடப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் அம்மாநில செய்திகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



    இந்நிலையில், இன்று இதுதொடர்பாக பேசிய மாவட்ட கூடுதல் ஆட்சியர், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். #Rajasthan
    Next Story
    ×