என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.500 கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி திருமணம்
Byமாலை மலர்26 Sep 2018 5:34 AM GMT (Updated: 26 Sep 2018 5:34 AM GMT)
கர்நாடக மாநிலத்தில் ரூ.500 கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் குறித்து கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். #DebtIssues #WomenAbducted
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் கோகாக் அருகில் உள்ள முராகிபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கொன்னாவர். இவரது மனைவி பார்வதி.
பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பார்வதியும் அதே ஓட்டலில் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ரமேஷிடம் பார்வதி ரூ.500 கடன் வாங்கி இருந்தார். 2 மாதங்கள் ஆகியும் கடனை அவர் திருப்பித்தரவில்லை. இதனால் ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் இதுபற்றி போலீசில் புகார் செய்ய வந்தார். அவர் தனது மனைவியை நண்பர் ரூ.500 கடனுக்காக கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இவரது விசித்திரமான புகாரால் போலீசார் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் பசவராஜ் அங்குள்ள துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவரது புகாரை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பசவராஜ் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். #DebtIssues #WomenAbducted
கர்நாடக மாநிலம் கோகாக் அருகில் உள்ள முராகிபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கொன்னாவர். இவரது மனைவி பார்வதி.
பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பார்வதியும் அதே ஓட்டலில் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ரமேஷிடம் பார்வதி ரூ.500 கடன் வாங்கி இருந்தார். 2 மாதங்கள் ஆகியும் கடனை அவர் திருப்பித்தரவில்லை. இதனால் ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் இதுபற்றி போலீசில் புகார் செய்ய வந்தார். அவர் தனது மனைவியை நண்பர் ரூ.500 கடனுக்காக கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இவரது விசித்திரமான புகாரால் போலீசார் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் பசவராஜ் அங்குள்ள துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவரது புகாரை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பசவராஜ் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். #DebtIssues #WomenAbducted
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X