என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் விவகாரம்: காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன் உறுதி
Byமாலை மலர்24 Sep 2018 10:18 PM GMT (Updated: 24 Sep 2018 10:18 PM GMT)
‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், நாடு முழுவதும் சுற்றி வந்து காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #RafaleRow #NirmalaSitharaman #Congress
புதுடெல்லி:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.
அந்த பிரசாரத்தை முறியடிப்போம். நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை சொல்வோம்.
காங்கிரஸ் கட்சியில் விரக்தி நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வித களங்கமும் இல்லாமல் இருப்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில், சர்வதேச பரிமாணத்தையும் நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இன்னும் 2 வாரங்களில், ரபேல் விவகாரத்தில் பெரிய குண்டு வெடிக்கும்” என்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அதேபோல், பிரான்ஸ் முன்னாள் அதிபர், சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
இது, தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. காங்கிரஸ் கட்சி எப்படி இதை முன்கூட்டியே கணித்தது? முன்பு ஒருமுறை, காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் உதவியை கேட்டது, நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #RafaleRow #NirmalaSitharaman #Congress
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.
அந்த பிரசாரத்தை முறியடிப்போம். நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை சொல்வோம்.
காங்கிரஸ் கட்சியில் விரக்தி நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வித களங்கமும் இல்லாமல் இருப்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில், சர்வதேச பரிமாணத்தையும் நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இன்னும் 2 வாரங்களில், ரபேல் விவகாரத்தில் பெரிய குண்டு வெடிக்கும்” என்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அதேபோல், பிரான்ஸ் முன்னாள் அதிபர், சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
இது, தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. காங்கிரஸ் கட்சி எப்படி இதை முன்கூட்டியே கணித்தது? முன்பு ஒருமுறை, காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் உதவியை கேட்டது, நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #RafaleRow #NirmalaSitharaman #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X