என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
Byமாலை மலர்24 Sep 2018 6:48 AM GMT (Updated: 24 Sep 2018 6:48 AM GMT)
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். #PMModi #SikkimAirport
கேங்டாக்:
சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க அங்கு 605 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்தியா-சீனா எல்லையில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் சிக்கிம் மாநில முதல் மந்திரி பவான் சாம்லிங், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், விமானங்களை நிறுத்தி வைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல 116 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. 106 மீட்டர் நீளத்தில் 76 மீட்டர் அகலத்தில் இரு பெரிய விமானங்களை நிறுத்தி வைக்கும் இடமும் இங்குள்ளது. 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய நிர்வாக கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் அக்டோபர் நான்காம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. #PMModi #SikkimAirport
சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க அங்கு 605 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்தியா-சீனா எல்லையில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் சிக்கிம் மாநில முதல் மந்திரி பவான் சாம்லிங், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகிலேயே முதன்முறையாக இந்த புதிய விமான நிலையத்தின் தடுப்புச் சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 30 மீட்டர் அகலத்தில் சுமார் 1.75 மீட்டர் நீளத்துக்கு இங்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 0.75 மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் விமானப்படை விமானங்களும் இங்கு தரையிறங்கலாம்.
இந்த விமான நிலையத்தில் அக்டோபர் நான்காம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. #PMModi #SikkimAirport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X