search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் முதல் மந்திரியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி
    X

    ராஜஸ்தான் முதல் மந்திரியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி போட்டியிடுகிறார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட்சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்ராபதான் தொகுதியில் முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா போட்டியிட முடிவு செய்துள்ளார். 

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி முகுல் சவுத்ரி போட்டியிட உள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஜல்ராபதான் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளேன். ஏனெனில் அங்கு தான் நான் பிறந்தேன். எனது கணவர் பங்கஜ் சவுத்ரி ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். முதலில் நான் இந்த மண்ணின் மகள். அடுத்துதான் எனது கணவருக்கு மனைவி.

    மாநிலத்தில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் திறமையற்ற செயல்பாட்டை கண்டித்து சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
     
    முதல் மந்திரியின் தவறான ஆட்சி முறையால் ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து ஒட்டுமொத்த மாநிலமும் பாதிப்பு அடைந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கான நடவடிக்கையாகவே நான் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    Next Story
    ×