search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் தொடரும் வன்முறை - நள்ளிரவில் வீடு புகுந்து ஆள் கடத்தல்
    X

    காஷ்மீரில் தொடரும் வன்முறை - நள்ளிரவில் வீடு புகுந்து ஆள் கடத்தல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 போலீஸ்காரர்கள் கடத்தி, கொல்லப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்றனர். #SoporeGunmen #manabducted
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

    காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களில் 3 போலீசார் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம், சோபோர் நகரத்தின் அருகேயுள்ள ஹர்வான் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று பின்னிரவில் புகுந்த பயங்கரவாதிகள் முஷ்ட்டா அஹமத் மிர்(45) என்பவரை கடத்திச் சென்றனர்.

    அவரது நிலைமை என்னவானது? என்பது புரியாத நிலையில் அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #SoporeGunmen #manabducted 
    Next Story
    ×