search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மைகளை அறியாத ராகுல் காந்தி யாரோ எழுதி கொடுத்ததை படித்து குற்றம்சாட்டுகிறார் - யோகி ஆதித்யநாத்
    X

    உண்மைகளை அறியாத ராகுல் காந்தி யாரோ எழுதி கொடுத்ததை படித்து குற்றம்சாட்டுகிறார் - யோகி ஆதித்யநாத்

    ரபேல் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யாரோ எழுதி கொடுத்ததை படித்துவிட்டு குற்றம்சாட்டுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். #YogiAdityanath #RafaleDeal #RahulGandhi


    லக்னோ :

    ரபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ள தகவலில், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார்.

    இதற்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் இன்று குறிப்பிட்டுள்ளதாவது :-

    ராகுல் காந்தி ஓர் உதவியற்றவர், உண்மைகளை பற்றி அறியாத அவர் யாரோ எழுதி கொடுப்பவற்றை படித்துவிட்டு மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார். இந்திய சுதந்திரத்திற்கு பின் 70 வருடங்களுக்கும் மேல் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினரின் தொடர்ச்சியான ஆட்சியின் கீழ் ஏழைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை. இந்த திட்டங்கள் பற்றி ஏழைகள் தெரிந்து இருந்தால் அவர்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கமாட்டார்கள்.

    எனவே, இந்திய மக்களிடம் காங்கிரஸ் மற்றும் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். யார் திருடன் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறினார்.

    அவர்கள் (காங்கிரஸ் கட்சி) நாட்டை சாதி மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றால் பிரித்து தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றின் முன்பாக சரணடைந்து விட்டனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேற்றத்தினை நோக்கி பயணிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #YogiAdityanath #RafaleDeal #RahulGandhi
    Next Story
    ×