search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் - கொடூர கொலையால் போலீஸ் திணறல்
    X

    டெல்லியில் மர்மமாக இறந்து கிடந்த தாயும் மகளும் - கொடூர கொலையால் போலீஸ் திணறல்

    புதுடெல்லியில் தனது மாற்றுத் திறனாளியான 40 வயது மகளும், அவரது 60 வயது தாயும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். #Delhi
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள மியான்வாளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனது மாற்றுத் திறனாளியான 40 வயது மகளுடன் வசித்து வந்தார். இன்று காலை அவர்களது வீட்டில் வேலை பார்ப்பவர் வழக்கம்போல் வேலைக்கு வந்து கதவை தட்டும்போது கதவு திறக்கப்படவில்லை. உடனே பின்பக்க கதவு வழியாக சென்ற அவர், தாயும், மகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக டெல்லி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கைகளும், வாயும் துணியால் கட்டப்பட்ட நிலையில் தாய் ஷாஷி டல்வார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாற்றுத் திறனாளியான அவரது மகளோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.



    இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஷாஷி டல்வாரின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், 2 மகன்கள் மும்பை மற்றும் கனடாவில் இருப்பதாகவும், இவர்கள் மட்டுமே தனிமையில் வசித்து வந்ததாகவும் கூறுயுள்ளனர்.

    மேலும், சம்பவ இடத்தில் தீவிரமாக சோதனையிட்ட அதிகாரிகள், நட்பு ரீதியாக உள்ளே நுழைந்த யாரோதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    தனிமையில் வசித்து வந்த இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் இரவோடு இரவாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    Next Story
    ×