search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்தானது வருத்தம் அளிக்கிறது - மெகபூபா முப்தி
    X

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்தானது வருத்தம் அளிக்கிறது - மெகபூபா முப்தி

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரிமெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.



    இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்தது. இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரி மெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    Next Story
    ×