search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாரா? முக ஸ்டாலின் சவால்
    X

    ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாரா? முக ஸ்டாலின் சவால்

    மின்சார துறையில் நடந்த ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாராக உள்ளாரா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #DMK #Thangamani
    சென்னை:

    தமிழக மின்சார துறையில் காற்றாலை மின்சார உற்பத்தில் என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் தங்கமணி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், “காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை. குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை. ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளேன். என் மீது வழக்கு தொடர தங்கமணி தயாராக உள்ளாரா?” என கூறினார்.

    மேலும், தங்கமணி வழக்கு போட வில்லை என்றால், அவர் மீது நான் வழக்கு போடுவேன் எனவும் ஸ்டாலின் கூறினார். 
    Next Story
    ×