என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வாய்ப்பு இல்லை - சுஷில்குமார் மோடி
Byமாலை மலர்21 Sep 2018 6:40 AM GMT (Updated: 21 Sep 2018 6:40 AM GMT)
பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #PetrolPriceHike #GST #SushilKumarModi
புதுடெல்லி:
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பதாகவும், ஒரு வேளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு மேல் கூடுதல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்துவிட்டால் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும் என்று கூற முடியாது எனவும் சுஷில்குமார் மோடி கூறியுள்ளார். #PetrolPriceHike #GST #SushilKumarModi
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி, பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக தாம் கருதவில்லை என்றும், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பதாகவும், ஒரு வேளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு மேல் கூடுதல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்துவிட்டால் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும் என்று கூற முடியாது எனவும் சுஷில்குமார் மோடி கூறியுள்ளார். #PetrolPriceHike #GST #SushilKumarModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X