search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி - ராஜஸ்தானில் சோகம்
    X

    இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி - ராஜஸ்தானில் சோகம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவில் விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துவந்தாலும் விபத்துக்களின் விகிதம் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மதோபூருக்கும் ஜோராவார் நகர் பகுதிக்கும் இடையே உள்ள சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    இந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Rajasthan
    Next Story
    ×