search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்றது இந்தியா - அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை
    X

    இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்றது இந்தியா - அமெரிக்காவில் இருதரப்பு பேச்சுவார்த்தை

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IndPakTalks #UNGA
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ராவீஷ் குமார் தெரிவித்தார். 
    Next Story
    ×