search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க 3 மாத காலஅவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க 3 மாத காலஅவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #ED
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. 

    இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 6 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கால அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியது இருப்பதால் கால அவகாசம் வழங்கும் படி கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். 
    Next Story
    ×