search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்
    X

    தாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகளின் உயிரை குடித்த நாகம்

    ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகம் ஒன்று, அங்கு இருந்த 4 நாய்க்குட்டிகளை அவற்றின் தாயின் கண் முன்னே கொத்தி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Odisha #CobraKillspuppies
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற அந்த நல்ல பாம்பு நாய் ஒன்றின் இருப்பிடத்துக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் அளித்து இருந்த மக்கள், வனத்துறையினர் வருகைக்காக காத்து இருந்தனர். இதையடுத்து, தனது 5 குட்டிகளுடன் அங்கு இருந்த தாய் நாய் பாம்பை கண்டு குரைக்க துவங்கியது.



    நாய்களின் இருப்பிடத்தில் நுழைந்த அந்த பாம்போ, நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக கொத்தியது. இந்த சமயத்தில் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேரவே, பாம்பு அப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

    இருப்பினும் பாம்பு கொத்தியதில் 4 நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்தப்பிய நிலையில், தனது இறந்த குட்டிகளை தாய் நாய் துன்பத்துடன் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. #Odisha #CobraKillspuppies
    Next Story
    ×