search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீங்கள்தான் என் எஜமானர்கள், நான் உங்கள் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்
    X

    நீங்கள்தான் என் எஜமானர்கள், நான் உங்கள் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்

    வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றிய பணிகளை இன்று குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி நான் உங்கள் சேவகன், நீங்கள்தான் என் எஜமானர்கள் என்று கூறினார். #PMModi #ModiInVaranasi
    லக்னோ:

    வாரணாசி பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி  550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் இன்று தொடங்கி வைத்தார். அந்த தொகுதியின் எம்.பியாக கடந்த நான்காண்டுகளில் தாம் செய்த பணிகளை பட்டியலிட்ட அவர், கிழக்கிந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.



    மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நான் உங்களின் சேவகன். நீங்கள் தான் எனது எஜமானர்கள். அதனால் இந்த தொகுதிக்கு நான் செய்துள்ளவற்றை உங்களிடம் விளக்க வேண்டியது எனது கடமையாகும். வாரணாசியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
     
    வாரணாசி அனைத்து வகையிலும் முன்னேறியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தில் இருந்து தற்போது 21 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாரநாத் ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் ஒலி, ஒளி காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். #PMModi #ModiInVaranasi
     
    Next Story
    ×