search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றன - அமைச்சர் தங்கமணி பேட்டி
    X

    மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றன - அமைச்சர் தங்கமணி பேட்டி

    தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani
    புதுடெல்லி:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கூடுதல் நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும் நிலக்கரி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்கள்.



    தமிழகத்தில் மழை காரணமாக மின்சார தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசியல் செய்வதற்காக மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்பதே வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    Next Story
    ×