search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
    X

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #BiharCM #NitishKumar
    புதுடெல்லி:

    டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.



    ஆனால், லேசான காய்ச்சல் மற்றும் கண் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என தெரிகிறது. #BiharCM #NitishKumar

    Next Story
    ×