என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்
Byமாலை மலர்15 Sep 2018 11:04 AM GMT (Updated: 15 Sep 2018 11:04 AM GMT)
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நியமனம் செய்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #PChidambaram #RahulGandhi
புதுடெல்லி :
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் முயற்சிகளில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக உள்ள மாநில கட்சிகளை ஒன்றினைத்து மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற மூன்று குழுக்களை கடந்த மாதம் அமைத்தார். இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்களை நியமித்து ராகுல் காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளராக ராஜீவ் கௌடா, விளம்பர குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பர குழு ஒருங்கினைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கினைப்பு குழு தலைவராக முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே அந்தோனி, ஒருங்கினைப்பு குழுவின் ஒருங்கினைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #PChidambaram #RahulGandhi
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் முயற்சிகளில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக உள்ள மாநில கட்சிகளை ஒன்றினைத்து மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற மூன்று குழுக்களை கடந்த மாதம் அமைத்தார். இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்களை நியமித்து ராகுல் காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளராக ராஜீவ் கௌடா, விளம்பர குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பர குழு ஒருங்கினைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கினைப்பு குழு தலைவராக முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே அந்தோனி, ஒருங்கினைப்பு குழுவின் ஒருங்கினைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #PChidambaram #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X