search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூட நம்பிக்கையின் உச்சம் - மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்
    X

    மூட நம்பிக்கையின் உச்சம் - மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்

    ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை குணப்படுத்த, அவரை தலைகீழாக தொங்கவிட்டு, சாமியார் ஒருவர் நெருப்பு மூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புவனேஸ்வர்:

    உலகின் பல இடங்களிலும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் மூட நம்பிக்கைகளால் விளையும் துன்பங்கள் ஏராளம். ஒருவர் உடல்நலக் குறைவுற்றால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், கோவிலுக்கும், சாமியார்களிடமும் அழைத்துச் செல்வதால் பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீட்கப்பட்ட ஒடிசா இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா என்ற இளைஞர் உடல் ஊனமுற்று இருக்கிறார். இவரை குணப்படுத்தும் முயற்சியில் அவரது தாயார் கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அனுகியுள்ளார்.

    அங்கு, இவரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டினால் உடல் ஊனம் குணமாகும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை நம்பிய அவரது தாயார் நந்தாவை பலிகுடா எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்தாவின் எதிர்ப்பையும் மீறி, அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நெருப்பு மூட்டியுள்ளனர்.

    இதனால் படுகாயமடைந்த நந்தாவுக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்க அந்த சாமியார் கூறியுள்ளார். ஆனால், மிகவும் மோசமான நிலையில் இருந்த நந்தாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நந்தா, மத நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த மூட சடங்குகளினால் தற்போது தீக்காயங்களுடன் துன்புற்று வருகிறார்.
    Next Story
    ×