search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்
    X

    ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகளும் பலியாகின்றனர்.

    இந்நிலையில், ஜஜார் கோட்லி என்ற பகுதியில் நேற்று காரில் வந்த பயங்கரவாதிகள் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இன்று மதியம் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir
    Next Story
    ×