search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா - சுப்பிரமணிய சாமி
    X

    அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா - சுப்பிரமணிய சாமி

    மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
    புதுடெல்லி:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விஜய் மல்லையா, “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் ஜெட்லி, 2014-ம் ஆண்டு  முதல் தாம் விஜய் மல்லையாவை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என கூறியிருந்தார்.



    இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2015-ம் ஆண்டு பாராளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்து தாம் லண்டனுக்கு தப்புவது குறித்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், விஜய் மல்லையா மீது இருந்த லுக் அவுட் நோட்டீஸ் தளர்க்கப்பட்டு, 54 பரிசோதிக்கப்பட்ட பயண பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு முதல் விஜய் மல்லையவை தாம் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில், அருண் ஜெட்லியிடம் லண்டனுக்கு தப்புவது குறித்து சொல்லிவிட்டுதான் சென்றார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
    Next Story
    ×