search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலையத்தில் அடுத்தடுத்து சிக்கும் தங்க கட்டிகள்
    X

    டெல்லி விமான நிலையத்தில் அடுத்தடுத்து சிக்கும் தங்க கட்டிகள்

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தங்கம் கடத்தி வந்தவர்களிடம் இருந்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #Delhi
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்துகொண்ட 51 வயது முதியவரை தீவிரமாக கண்காணித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2 கிலோ எடை கொண்ட 19 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் 67.57 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தங்க கடத்தல் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், முன்னதாக ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 24 தங்க கட்டிகளை அவர் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. சுமார் 2.8 கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்டிகள் 85.29 லட்ச ரூபாய் மதிப்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க கட்டிகளின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. #Delhi
    Next Story
    ×