search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளின் பாரத் பந்தை விமர்சித்த சிவசேனா
    X

    எதிர்க்கட்சிகளின் பாரத் பந்தை விமர்சித்த சிவசேனா

    நாடு முழுவதும் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    மும்பை:

    வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்கவும், விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க.வின் ஆதரவு கட்சியான சிவசேனா தனது பத்திரிகையில் விமர்சனம் செய்துள்ளது. அதில், பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிக்கான பொறுப்புகளை தாம் சுமந்து வந்ததாகவும், தற்போது விழித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் பொதுமக்களின் நலனில் எவ்வாறு பங்காற்றும் என் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், எதிர்க்கட்சிகள் அதன் பணியை முறையாக செய்யும்போது, மக்களின் விருப்பம் பாதுகாக்கப்படுவதாகவும் சாமனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிவசேனா கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அதன் தலைவர் உத்தவ் தாக்ரே, எதிர்க்கட்சிகளின் பலம் அறியவே வேண்டி பங்கேற்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார் என சாமனாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    Next Story
    ×