என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் போதை ஓட்டுனரால் நடந்த விபரீதம் - தறிகெட்டு ஓடிய கார் மோதி 2 பேர் பலி
Byமாலை மலர்9 Sep 2018 6:52 PM GMT (Updated: 9 Sep 2018 6:52 PM GMT)
டெல்லியில் மதுபோதையில் இருந்த ஓட்டுனரால் தறிகெட்டு ஓடிய கார் நடைமேடையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி :
புதுடெல்லியில் ரஜோரி பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த 2 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-
டெல்லி பச்சிம் விகார் பகுதில் இருந்து இருந்து விமான நிலையத்தை நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்தது. அந்த கார் ரஜோரி பகுதியை தாண்டி செல்லும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நடைமேடையில் தறிகெட்டு ஓடியது. இதில் நடைமேடையில் படுத்திருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் தேவேஷ் (25) என்பவர்தான் காரை ஓட்டி வந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை செய்து வருகிரோம் என போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லியில் ரஜோரி பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த 2 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-
டெல்லி பச்சிம் விகார் பகுதில் இருந்து இருந்து விமான நிலையத்தை நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்தது. அந்த கார் ரஜோரி பகுதியை தாண்டி செல்லும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நடைமேடையில் தறிகெட்டு ஓடியது. இதில் நடைமேடையில் படுத்திருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் தேவேஷ் (25) என்பவர்தான் காரை ஓட்டி வந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை செய்து வருகிரோம் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X