search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் - கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார்
    X

    டெல்லியில் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் - கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார்

    குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார். #AAPgovt #Delhidoorstep
    புதுடெல்லி:

    ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டத்தை நாளை (10-ம் தேதி) முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

    டெல்லியில் உள்ள அரசு தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த திட்டத்தின்கீழ் டெல்லி அரசுக்கு உட்பட்ட வருவாய்  துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து  துறை, குடிநீர் வாரியம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை தொடர்புடைய 40 சேவைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் முன்னர் வெளியிட்ட பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்குகிறது’ என குறிப்பிட்டிருந்தார். #AAPgovt  #Delhidoorstep 
    Next Story
    ×