என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2019 தேர்தலில் ஆட்சி அமைத்தால் 50 ஆண்டுகளுக்கு பாஜகவை அசைக்க முடியாது - அமித் ஷா நம்பிக்கை
Byமாலை மலர்9 Sep 2018 2:18 PM GMT (Updated: 9 Sep 2018 2:18 PM GMT)
வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜகவை யாராலும் அசைக்க முடியாது என அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #AmitShah #2019Election
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், 2019 தேர்தலில் ஆட்சி அமைத்தால் 50 ஆண்டுகளுக்கு பாஜகவை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். 2019 தேர்தல் வெற்றியை அடுத்து அடுத்த 50 ஆண்டுகள் யாராலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது. இதனை நாங்கள் பெருமைக்காக சொல்லவில்லை, எங்களுடைய பணியின் அடிப்படையில் சொல்கிறோம் என அமித் ஷா தெரிவித்ததாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். #BJP #AmitShah #2019Election
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X