என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்
Byமாலை மலர்9 Sep 2018 10:53 AM GMT (Updated: 9 Sep 2018 10:53 AM GMT)
குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #SardarPatelstatue
அகமதாபாத்:
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.
2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் சுமார் ஐந்தாண்டுகளில் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி திறந்து வைப்பார் என குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று தெரிவித்துள்ளார். #SardarPatel statue #SardarPatelstatue
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.
குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் சுமார் ஐந்தாண்டுகளில் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி திறந்து வைப்பார் என குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று தெரிவித்துள்ளார். #SardarPatel statue #SardarPatelstatue
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X