search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் நேபாளம் முன்னாள் பிரதமர் சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் நேபாளம் முன்னாள் பிரதமர் சந்திப்பு

    நேபாளம் நாட்டின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான புஷ்பா கமால் டஹால் பிரச்சாந்தா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #PushpaKamalPrachanda #PMModi
    புதுடெல்லி:

    இந்தியா வந்துள்ள நேபாளம் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்பா கமால் டஹால் பிரச்சாந்தா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

    தனது பதவிக்காலத்தில் இந்த ஆண்டில் மட்டும் இருமுறை நேபாளம் நாட்டுக்கு சென்றதை நினவுகூர்ந்த பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைந்து வருவதாக 
    குறிப்பிட்டார். 

    இதற்கு உறுதுணையாக இருந்தமைக்காக முன்னாள் பிரதமரான பிரச்சாந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பின்னர், இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விபகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். #PushpaKamalPrachanda #PMModi
    Next Story
    ×