search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலுக்கு வரும் குழந்தைகள் கையில் மென்பொருள் கயிறு - கடத்தலை தடுக்க புதிய திட்டம்
    X

    திருப்பதி கோவிலுக்கு வரும் குழந்தைகள் கையில் மென்பொருள் கயிறு - கடத்தலை தடுக்க புதிய திட்டம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் போது கூட்டத்தில் குழந்தைகள் காணாமல்போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் ஒரு மென்பொருள் சாதனம் அடங்கிய கயிறு கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி கொடியேற்றம் அன்று அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களை சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    எனவே அன்று திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி சிவக்குமார்ரெட்டி (பொறுப்பு) ஆகியோர் பல இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சந்திரபாபுநாயுடு எந்த வழியாக கோவிலுக்குள் வருகிறார். பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் வழியில் எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது எனக் கேட்டார். மேற்கு மாடவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரும்புப் படிக்கட்டுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

    கருடசேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பஸ்களில் வருவார்கள். மேலும் பக்தர்கள் தங்களின் வாகனங்களிலும் திருமலைக்கு வருவார்கள்.

    திருமலையில் உள்ள வெளி வட்டச்சாலையில் 750 வாகனங்களை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். திருமலையில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்க, ஒருசில மைதானங்களை சீரமைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.

    வாகன வீதிஉலாவின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 2 ஆயிரத்து 500 போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கருடசேவையின் போது 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். திருட்டுச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாறு வேடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தி பக்தர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

    திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் உடனே போலீசாருக்கும், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க போன் வசதி செய்து கொடுக்கப்படும்.

    கூட்டத்தில் குழந்தைகள் காணாமல்போவது, மர்ம ஆசாமிகளால் கடத்தப்படுவது போன்ற சம்பவங்களை தடுக்க குழந்தைகளின் கைகளில் ஒரு மென்பொருள் சாதனம் அடங்கிய கயிறு கட்டப்படும். அதன் மூலம் கடத்தப்பட்ட குழந்தைகளின் இருப்பிடம், விவரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து, உடனே மீட்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான சூப்பிரண்டு என்ஜினீயர் ராமச்சந்திராரெட்டி, கேட்டரிங் அதிகாரி சாஸ்திரி மற்றும் பலர் உடனிருந்தனர். #TirupatiTemple

    Next Story
    ×